எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,

இராமாபுரம் வளாகம். சென்னை -89

தமிழ்த்துறையின் (EFL) வழியாக 10.07.2021 முதல் 20.07.2021 அன்று வரை 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளப் பள்ளி மாணவர்களுக்காக “எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்” என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.   இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்புவரைப் பயிலும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில்  சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து பங்கு கொண்டனர். இணைய வழியிலான நடைபெறும் இப்போட்டி அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர் முனைவர்.சி.சுந்தர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின்  மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. இப்போட்டியை எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாக தமிழ்த்துறைப் பேராசிரியர்   கோ.கணேஷ் ஒருங்கிணைத்தார்.